மதுவிலக்கு சாத்தியமா? என்கிற முதல் பகுதியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்: http://www.ganapathi.me/2015/08/25/மதுவிலக்கு-சாத்தியமா-1/
மதுவிலக்கு சாத்தியமா? என்கிற இரண்டாவது பகுதியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்: http://www.ganapathi.me/2015/08/30/மதுவிலக்கு-சாத்தியமா-2/
மதுவிலக்கு சாத்தியமா? என்கிற முன்றாவது பகுதியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்: http://www.ganapathi.me/2015/09/01/மதுவிலக்கு-சாத்தியமா-3
மதுவிலக்கு சாத்தியமா? என்கிற நான்காவது பகுதியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்: http://www.ganapathi.me/2015/09/03/மதுவிலக்கு-சாத்தியமா-4/
இந்த நான்கு பதிவுகளில் மதுவிலக்கினால் ஏற்படும் சுமார் 30 ஆயிரம் கோடி வருவாய் இழப்புக்கு மாற்று வழி என்ன என்பதற்கு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தால் பத்திரிகை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல் உங்கள் பார்வைக்கு பகிரப்பட்டது(இந்த தகவல் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் அனுமதியுடன் இங்கே பகிரப்பட்டுள்ளது).
இந்தப் தொடர் பதிவுகளின் முதல் பதிவில் மக்களின் மனக் கேள்விகளாக இரண்டு கேள்விகளை எடுத்து தகவல் சொல்ல ஆரம்பித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
1) எல்லா அண்டை மாநிலங்களில் மது விற்பனை தடை செய்யப்படவில்லை; தமிழகத்தில் மதுவிலக்கால் கள்ளச்சாராயம் பெருகிவிடும், மக்கள் மரணமடைவர்;
2) மக்கள்நலத் திட்டங்களை (இலவசங்கள் ???) நிறைவேற்ற நிதிப்பற்றாக்குறை ஏற்படும்
மக்கள்நலத் திட்டங்கள் சார்ந்த நிதிப்பற்றாக்குறையை கையாளப் பல வழிகளில் சில தகவல்கள் முன்பதிவுகளில் இருக்கின்றன. இப்பொழுது அடுத்த “கள்ளச்சாராயம்” சார்ந்த கேள்விக்கு வருவோம்.
கள்ளச்சாராயம் சார்ந்த தகவல்களின் பதிவு உள்ள சுட்டி இங்கே : http://closetasmac.blogspot.in/2015/07/tamilnadu-no1-state-in-deaths-due-to.html
கள்ளச்சாராயம் சார்ந்த சாவுகளின் 10 வருட புள்ளி விவரங்கள் தெளிவாக உள்ளது.
“மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயத்தால் மக்கள் கொத்துக் கொத்தாக சாவார்கள் என்ற தமிழக அரசின் வாதம் அடிப்படை ஆதாரம் இல்லாதது என்பது தெளிவாகிறது. குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருக்கிறது. இதனால், அங்கு கள்ளச்சாராயம் குடித்து பல்லாயிரக்கணக்கான பேர் செத்துவிடவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அங்கு கள்ளச்சாராயத்தால் செத்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைக் கூட எட்டவில்லை. 843 என்ற அளவிலேயே இருக்கிறது.”
நிச்சயமாக இந்தப் செய்திகளைப் படித்தபின் “கள்ளச்சாராயம்” சார்ந்த “மதுவிலக்கு” நிலைப்பாடு சற்றே மாறும் என்பது திண்ணம்.
இவ்வாறு மதுவிலக்கு சார்ந்த பல வாதப் பிரதி வாதங்கள் நடந்துள்ளன… நடக்கின்றது… நடக்கும். ஆனால் அடிப்படை செய்தி வேறு. கடந்த 10 ஆண்டுகளில் ஏன் மது இவ்வளவு பெரிய சவாலாக மாறியது என நாம் யோசிக்க வேண்டும்….
அரசு மது விற்றது … பல மதுக் கடைகள் … பல்வேறு காரணங்கள் இருந்தாலும் … என் அளவில் இரண்டு மிகப் பெரிய தவறுகள் நடந்துள்ளன….
1) “மது” தவறு என்கின்ற ரீதியில் உள்ள பிரச்சாரமோ விளம்பரமோ குறைந்த அல்லது இல்லவே இல்லை என்கின்ற நிலை
2) நடுத்தர மக்களின் “மது” சார்ந்த மனநிலை மாற்றம்
சற்றே சிந்தித்து பார்த்தால் புகைப் பழக்கமோ இல்லை குட்கா பழக்கமோ இந்தப் 10-12 வருடங்களில் பெருகவில்லை …. காரணம் இந்தப் பழக்கங்கள் சார்ந்த தீய விளைவுகளை விளக்கும் பிரச்சாரம். “புகை தீது” என்கின்ற வாசகம் எவ்வளவு பெரிய அளவில் அட்டையில் அச்சிடப் படுகிறது …. இந்த அளவை குடுவையில் உள்ள “மது தீது” வாசகத்துடன் ஒப்பிட்டால் நான் சொல்வது உங்களுக்குப் புரியும் … குட்கா முகேஷ் உங்கள் நினைவில் நிச்சயம் நிற்கும் …
இது எல்லாம் தாண்டி “மது” எப்பொழுதும் சமூகத்தில் பொருளாதார அளவில் நடுத்தர வர்கத்தின் வாழ்க்கை முறையில் இருந்தது இல்லை. “குடிகாரன்” என்கின்ற பெயருக்குப் பயந்த பலர் இருந்தனர். குடிப்பது பாவம் என்கிற்ற அளவில் கூட சிந்தித்த நபர்கள் கொண்ட சமூகம் நம் தமிழ்ச் சமூகம். ஆனால் இன்று நிலைமை வேறு. நடுத்தர வர்கத்தின் வாழ்க்கை முறையில் “மது” தன் இடத்தை அடைந்து விட்டது….
குடிப்பது தவறு இல்லை ….
யாரு குடிக்காம இருக்கா…
என் கணவர் அளவா குடிப்பார்…
நான் பீர் மட்டும் குடிப்பேன்….
வெள்ளிக்கிழமை மட்டும் தான் …
weekend party மட்டும் தான் …
bachelors party மட்டும் தான் …
பிறந்தநாள் party மட்டும் தான் …
நான் குடிக்கிறது என் பொண்டாட்டிக்கு தெரியும் …
wine சாப்டா இதயத்துக்கு நல்லது ….
குடிச்சா நல்லா சாப்பிடனும்…
only foreign சரக்கு மட்டும் தான் ….
இவ்வாறு பல்வேறு காரணங்களை கண்டு கொண்டு, “மது” பலரது வாழ்வில் ஒரு அங்கமாக மாறிப் போனது … இந்த மக்களின் மனநிலை மாற்றம் தான் மிகப் பெரிய சவால்…
“மது” நிலை மாற்றம் தகர்த்தது இன்றைய சமுதாயத்தை மட்டுமல்ல எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வும் தான் என்பதை நாம் அனைவரும் எண்ணிப் பார்க்கவேண்டும்…
நாம் விவாதித்த விவாதிக்கும் விவாதிக்கப் போகும் பல்வேறு காரண காரியங்களும் “மது” தீங்கு சார்ந்த சிறு முன்செல்லும் மற்றம் என்பது திண்ணம். நிச்சயம் அவை அனைத்தும் நடக்க வேண்டும். மது கடைகளின் எண்ணிக்கை குறைய வேண்டும். அரசு மது விற்கக் கூடாது. முழு மதுவிலக்கு அவசியம். ஆனால் இவை எல்லாம் தாண்டி மக்களின் மன மாற்றம் ஒன்று தான் நிரந்தரத் தீர்வு…
வள்ளுவரின் 10 குறள் வேண்டாம் …. இந்த ஒரு குறள் நிச்சயம் உங்கள் மனதைக் கேள்வி கேட்கும் ….
துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுஉண்பார் கள்உண் பவர்.
பொருள்:
உறங்கினவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்; அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.
மன மாற்றம் தான் வழி …. நடக்கும் என்று நம்புவோமாக….